search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பாடைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
    X
    பாடைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

    வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் திருவிழா: பாடைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

    வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பாடைக்காவடி திருவிழா கடந்த 11-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் பிரசித்திப்பெற்ற சக்தி தலங்களுள் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    திருவிழாவின்போது பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து விநோதமான முறையில் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இந்த ஆண்டுக்கான பாடைக்காவடி திருவிழா கடந்த 11-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பாடைக்காவடி திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பாடை மீது படுத்து கோவிலை வலம் வந்து ‘பாடைக்காவடி’ நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்னர் பாடைக்கட்டி மகாமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×