search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி
    X
    திருப்பதி

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இவை கட்டாயம் தேவை

    சமீபத்தில் கொரோனா தொற்று 3-வது அலை பரவும் நிலையில் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இவற்றை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் அறிவுறுத்துகிறது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்ற, ‘நெகட்டிவ்’ சான்றிதழ் இல்லாமல் திருமலைக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களை அலிபிரி சோதனைச் சாவடியில் தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஊழியர்கள் கண்டறிந்து திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் ஏராளமான பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

    சமீபத்தில் கொரோனா தொற்று 3-வது அலை பரவும் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ், 48 மணிநேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ததற்கான ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் பக்தர்களுக்கு அறிவுறுத்துகிறது.

    அவ்வாறு வரும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இல்லையேல், திருப்பி அனுப்பப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×