என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இவை கட்டாயம் தேவை
Byமாலை மலர்25 Jan 2022 8:02 AM GMT (Updated: 25 Jan 2022 8:02 AM GMT)
சமீபத்தில் கொரோனா தொற்று 3-வது அலை பரவும் நிலையில் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இவற்றை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் அறிவுறுத்துகிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்ற, ‘நெகட்டிவ்’ சான்றிதழ் இல்லாமல் திருமலைக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களை அலிபிரி சோதனைச் சாவடியில் தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஊழியர்கள் கண்டறிந்து திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் ஏராளமான பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
சமீபத்தில் கொரோனா தொற்று 3-வது அலை பரவும் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ், 48 மணிநேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ததற்கான ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் பக்தர்களுக்கு அறிவுறுத்துகிறது.
அவ்வாறு வரும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இல்லையேல், திருப்பி அனுப்பப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்ற, ‘நெகட்டிவ்’ சான்றிதழ் இல்லாமல் திருமலைக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களை அலிபிரி சோதனைச் சாவடியில் தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஊழியர்கள் கண்டறிந்து திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் ஏராளமான பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
சமீபத்தில் கொரோனா தொற்று 3-வது அலை பரவும் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ், 48 மணிநேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ததற்கான ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் பக்தர்களுக்கு அறிவுறுத்துகிறது.
அவ்வாறு வரும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இல்லையேல், திருப்பி அனுப்பப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X