search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள்
    X
    தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள்

    தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம்

    தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் பழமை வாய்ந்த வேத நாராயண பெருமாள் கோவில் என்று அழைக்கப்படும் அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி பகல் பத்து உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதன்பிறகு ராபத்து உற்வசம் நடைபெறும். வருகிற 23-ந்தேதி கஜேந்திர மோட்ச நிகழ்ச்சியும், 24-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மணவழகன் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×