search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்சி புத்தூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மண்டல பூஜை
    X
    திருச்சி புத்தூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மண்டல பூஜை

    திருச்சி புத்தூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மண்டல பூஜை

    திருச்சி புத்தூர் பிஷப் குளத்தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மண்டல பூஜை செய்யப்பட்டது.
    திருச்சி புத்தூர் பிஷப் குளத்தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மண்டல பூஜை செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து பரிவார தெய்வங்களான செல்வ விநாயகர், பாலமுருகன், பேச்சியம்மன், ஒண்டிகருப்பு சாமி, மதுரை வீரன் சாமி, காத்தவராய சாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜையுடன் மண்டல பூஜை நடத்தப்பட்டது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி காளை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். மேலும் இந்த மண்டல பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×