என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவிலில் கைசிக துவாதசி விழா
Byமாலை மலர்16 Dec 2021 7:35 AM GMT (Updated: 16 Dec 2021 7:35 AM GMT)
சீர்காழி அண்ணன் பெருமாள் கோவிலில் கைசிக துவாதசி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற அண்ணன் பெருமாள் கோவில் உள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளுக்கு, இவர் அண்ணன் என்பதால் இவருக்கு அண்ணன் பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டதாக தலவரலாறு கூறுகிறது.
திருப்பதி பெருமாளுக்கு வேண்டுதல் செய்த பக்தர்கள், அந்த நேர்த்திக்கடனை இந்த கோவிலில் செய்யலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் கொண்டாடப்படும் கைசிக துவாதசி விழா நேற்று நடந்தது. இதனையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்.
அப்போது திரளான பக்தர்கள் நாராயணா, நாராயணா என சரண கோஷம் எழுப்பி பெருமாளை தரிசித்தனர்.
பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பதி பெருமாளுக்கு வேண்டுதல் செய்த பக்தர்கள், அந்த நேர்த்திக்கடனை இந்த கோவிலில் செய்யலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் கொண்டாடப்படும் கைசிக துவாதசி விழா நேற்று நடந்தது. இதனையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்.
அப்போது திரளான பக்தர்கள் நாராயணா, நாராயணா என சரண கோஷம் எழுப்பி பெருமாளை தரிசித்தனர்.
பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X