என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தம்மணம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்30 Oct 2021 6:09 AM GMT (Updated: 30 Oct 2021 6:09 AM GMT)
மாரியம்மன் கோவிலில் மேளதாளம் முழங்க தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வலம்புரி விநாயகர், மகாசக்தி மாரியம்மன் ஆகிய கோபுர கலசங்கள் மற்றும் மூலவர்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
நல்லம்பள்ளி அருகே உள்ள தம்மணம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வலம்புரி விநாயகர், மகாசக்தி மாரியம்மன் ஆகிய கோபுர கலசங்கள் மற்றும் மூலவர்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X