search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அய்யா வைகுண்டசாமி
    X
    அய்யா வைகுண்டசாமி

    கடலூர் அருகே பள்ளிப்பட்டு அய்யா வைகுண்டசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

    பள்ளிப்பட்டு அய்யா வைகுண்டசாமி கோவிலில் புரட்டாசி மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி அய்யா வைகுண்டசாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் ஸ்ரீமன் நாராயணசாமி நிழல்தாங்கல் என்ற பெயரில் அய்யா வைகுண்டசாமி கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதர்மம் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் நேற்று புரட்டாசி மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி அய்யா வைகுண்டசாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணிக்கு தீபம் ஏற்றி உகப்படிப்பும், பகல் 12 மணிக்கு அய்யா வைகுண்டசாமிக்கு அலங்காரத்துடன் உச்சிப்படிப்பு அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. இதில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர். பின்னர் மாலை 6 மணியளவில் தீபம் ஏற்றி உகபடிப்பு நடைபெற்றது.
    Next Story
    ×