search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யா வைகுண்டர்"

    • அப்போது சனாதன தர்மம் உச்சத்தில் இருந்தது. திருவாங்கூர் மகராஜா, அய்யா வைகுண்டரின் பெயரை முத்துக்குட்டி என்று மாற்றினார்.
    • சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அய்யா வைகுண்டர், கடவுள் அவதாரமாக வந்து மக்கள் அனைவரும் சமம் என சொல்லி புது வழிமுறையை கொண்டுவந்தார்.

    'அனைவரும் சமம்' என கூறிய அய்யா வைகுண்டர் சனாதனவாதியா? என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கேள்வியெழுப்பியுள்ளார்.

    திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "1833-ம் ஆண்டு அய்யா வைகுண்டர் அவதரித்தார். அந்த காலகட்டத்தில் அவரது சமூகத்தில் பிறந்தவர்கள் இந்து ஆலயம் அமைந்துள்ள தெருவில் செல்ல முடியாது. கோயிலுக்குள் நுழைய முடியாது. பெண்கள் மார்பில் துணி அணியக் கூடாது. ஆண்கள் தலைப்பாகை கட்டக் கூடாது என்ற நெருக்கடியான காலத்தில் அவர் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முடிசூடும் பெருமாள்.

    அப்போது சனாதன தர்மம் உச்சத்தில் இருந்தது. திருவாங்கூர் மகராஜா, அய்யா வைகுண்டரின் பெயரை முத்துக்குட்டி என்று மாற்றினார். சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அய்யா வைகுண்டர், கடவுள் அவதாரமாக வந்து மக்கள் அனைவரும் சமம் என சொல்லி புது வழிமுறையை கொண்டுவந்தார்.

    சமத்துவம், சமதர்மம், சாதி, மதம், இனத்துக்கு அப்பாற்பட்டு மனித இனம் ஒன்று என்ற உயர்ந்த குறிக்கோளை கொண்டு வந்தார். அவருக்கு சனாதான வாதிகளால்தான் துன்பம் வந்தது. அதனை எதிர்த்துப் போராடி சமதர்மத்தை நிலைநாட்டியவர். அவரை சனாதனவாதி என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    இதுபோல் கால்டுவெல் வட அயர்லாந்தில் பிறந்து லண்டனில் படித்து இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவில் 18 ஆண்டு காலம் படித்தார். 18 மொழிகளை கற்றுத் தேர்ந்தார். அந்த காலகட்டத்தில் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது என்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தார்கள்.

    அதனை மாற்றி திராவிடத்துக்கும், சமஸ்கிருதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, திராவிட மொழி தனி மொழி, உலகில் தோன்றிய மூன்று மொழிகளில் தமிழ் மொழி முதலில் தோன்றியது என்பதை ஆய்வு செய்து, தமிழில் இருந்துதான் பிற மொழிகள் தோன்றின என்பதை நிரூபித்தார். சொல்வதை கேட்க வேண்டும், இல்லை என்றால் சொந்தமாக தெரிய வேண்டும். இரண்டும் இல்லாமல் ஆளுநர் தவறுதலாக பேசுகிறார்" என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் அய்யா வைகுண்டர் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு, சாமிதோப்பு தலைமை பதி அடிகளார் பாலபிரஜாபதி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதுபோல் வரலாற்றை திரித்து கவர்னர் பேசி உள்ளார்.
    • உருவ வழிபாடு, மொழி, பேதம், ஆண், பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் அய்யா வைகுண்டர்.

    சென்னை:

    அய்யா வைகுண்ட சாமியின் 192-வது அவதார தின விழா மற்றும் மகாவிஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசாமி அருளிய 'சனாதன வரலாறு' என்ற புத்தக வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் எழுதிய அந்த புத்தகத்தை வெளியிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். அவர் கூறுகையில்,

    அதர்மத்தை அகற்றுவதற்காக கடவுள் நாராயணன் மனித அவதாரம் எடுத்துள்ளார். அந்த வரிசையில்தான் 192 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா வைகுண்டசாமியாக நாராயணன் அவதாரம் எடுத்து வந்தார். அப்போதிருந்த சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவத்தை கொண்டுவர முயற்சித்தார்.

    சனாதன தர்மத்தை கற்றுக்கொடுத்தார். ஐரோப்பாவை கிறிஸ்தவம் அடையும் முன்பே இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது. 1600-ம் ஆண்டுகளில் கிழக்கு இந்திய கம்பெனி இங்கு வந்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் ஆட்சியை ஏற்படுத்தியதுபோல இந்தியாவில் ஆட்சி அமைக்க முடியாது என்பதை அறிந்தனர். அதனால் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டனர் என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் அய்யா வைகுண்டர் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு, சாமிதோப்பு தலைமை பதி அடிகளார் பாலபிரஜாபதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    * அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதுபோல் வரலாற்றை திரித்து கவர்னர் பேசி உள்ளார்.

    * ஆரிய கோட்பாட்டிற்கு அணி சேர்ப்பது போல் கவர்னர் பேசி உள்ளது வருந்தத்தக்கது.

    * அய்யா வைகுண்டர் குறித்து கவர்னர் புரிந்து பேச வேண்டும்.

    * உருவ வழிபாடு, மொழி, பேதம், ஆண், பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் அய்யா வைகுண்டர்.

    * அய்யா வைகுண்டர் சனாதனத்தை ஆதரித்தவர் என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    * அய்யா வைகுண்டரை தனதாக்கி கொண்டு பட்டா போடுவதற்காக அவர்கள் பேசுவதை கண்டிக்கிறோம்.

    * கவர்னர் வரலாற்றை தெரியாமல் பேசவில்லை, திரித்து பேசுகிறார் என்று கூறி உள்ளார்.

    • இந்தாண்டு அய்யா வைகுண்டரின் 192-ம் அவதார நாள் மாசி 20ம் நாள், (3.3.2024) நடைபெறவுள்ளது.
    • 22.1.2024 அன்று சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கு நான் நேரில் சென்று, அய்யா வைகுண்டர் அவர்களது அருளாசியை பெற்றதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.

    அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "திருச்செந்தூர் கடற்கரை, சந்தோசபுரத்திற்கு தென்புறம் அய்யா வைகுண்டர் அவதரித்த அவதார பூமியில், 'வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை பெரியவர்களால்' அய்யா வைகுண்டர் அவதாரபதி அமைக்கப்பட்டது.

    இந்த அவதார பதியில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 19-ம் தேதி இரவு அய்யாவழி மக்கள், அய்யா வைகுண்டர் அவதரித்த அவதார பூமியில் ஒன்றுகூடி, மாசி 20 அன்று அதிகாலை சூரிய உதயத்தில் பதமிட்டு அய்யா வைகுண்டர் அவதாரக் காட்சியை கண்டு அருள் பெறுவார்கள்.

    மாண்புமிகு அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்ட மக்கள், அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் அவதார நிகழ்ச்சியிலும், பிறகு சாமிதோப்பு தலைமைபதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அய்யா வைகுண்டர் அருள் பெறுவதற்கு வசதியாக உள்ளூர் விடுமுறையை அறிவித்தார்கள்.

    கடந்த 22.1.2024 அன்று சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கு நான் நேரில் சென்று, அய்யா வைகுண்டர் அவர்களது அருளாசியை பெற்றதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.

    இந்தாண்டு அய்யா வைகுண்டரின் 192-ம் அவதார நாள் மாசி 20ம் நாள், (3.3.2024) நடைபெறவுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார பதியில், அய்யா வைகுண்டர் அவதார நிகழ்வில் கலந்துகொண்டு பிறகு, கன்னியாகுமரி சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கும் சென்று அய்யா அவர்களது திருவருளைப் பெறுவதற்கு இந்தியா முழுவதிலுமிருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் அனைவரும் அய்யா வைகுண்டர் அவர்களது திருஆசியை பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

    • விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு
    • அய்யாவழி அன்பு கொடிமக்கள் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் கடந்த 111 நாட்களாக தவவேள்வி நடைபெற்றது. இதன் நிறைவு விழா நிகழ்ச்சி நடந்தது. நாட்டில் அமைதி நிலவவும், தொழில் மேன்மை, கல்வி மேன்மை அறிவியல் மேன்மை போன்றவற்றை வலியு றுத்தியும் அய்யாவழி முறைப்படி ஆன்மீகம் தழைப்பதற்காகவும் இந்த வேள்வி நடைபெற்றது.

    நிறைவு நாள் விழா நிகழ்ச்சி அய்யா வழி சமய தலைவர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமையில் நடந்தது. அன்புவனம் நிர்வாகி பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி முன்னிலை வகித்தார்.

    விழாவில் விஜய்வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் முருகேசன் மற்றும் மகாராசன், முத்து கிருஷ்ணன் மற்றும் சேனா பள்ளி கோபாலகிருஷ்ணன், அய்யாவழி அன்பு கொடிமக்கள் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யாவை வழிபட்டனர்.
    • பக்கர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நேற்று ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அய்யாவழி பக்தர்கள் அதிகாலை முதலே குவியத் தொடங்கினர். அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சென்னை, கோவை மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் வருகை தந்தனர்.

    அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கினர். இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பு, அன்ன தர்மம் நடந்தது.

    பக்கர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தொடர்ந்து சாமிதோப்பு குரு பால ஜனாதிபதி அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.

    இரவு 7 மணிக்கு பிச்சிப்பூவால் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதி மற்றும் ரதவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யாவை வழிபட்டனர்.

    • தினமும் உகப்படிப்பு, அன்னதர்மம் வழங்குதல் நடக்கிறது.
    • தேரோட்டம் 31-ந்தேதி நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் கடற் கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக கொடி பட்டம் பதியைச்சுற்றி வந்து பதியை வந்தடைந்தது. பின்னர் கொடி மரத்தில் கொடியை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றினார். கொடி யேற்றத்தை தொடர்ந்து காலை 7 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாக னத்தில் பவனி, 9 மணிக்கு அன்னதர்மம், 12 மணிக்கு உச்சிபடிப்பு, பணிவி டையம் நடைபெற்றது

    பகல் 1 மணிக்கு அன்ன தர்மம், மாலை 4 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை 5 மணிக்கு புஷ்ப வாகன பவனி, 6 மணிக்கு அன்னதர்மம் இனிமம் வழங்குதல் நடக்கிறது. 11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் உகப்படிப்பு, பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம், வழங்குதல் நடக்கிறது.

    இதே போல் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம், கருட வாகனம், குதிரை, ஆஞ்சநேயர்,இந்திரன் என பல்வேறு வாகனங்களில் பவனி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 31-ந்தேதி பகல் 12.05 மணிக்கு நடக்கிறது.

    தேரோட்டத்தை தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பரா மரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் களக்காடு சுந்தர பாகவதர் குமார் ஜெய ராமன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். அன்று இரவு 1மணிக்கு காளை வாகன பவனியும் நடக்கிறது.

    • தேரோட்டம் 31-ந்தேதி நடக்கிறது.
    • இந்த விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும்.

    திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 191-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது.

    பின்னர் காலை 6 மணிக்கு ஆடி திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, மாலை 4 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடைபெறும். மாலை 5 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றார். தினமும் மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்படுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 11-ம் திருநாளான வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடைபெறும். மதியம் 12.05 மணிக்கு ஆடி திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதர்மம், இனிமம் வழங்கப்படுகிறது.

    விழா ஏற்பாடுகளை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள்சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுதுரை, துணைத்தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார் மற்றும் இணை தலைவர்கள், இணை செயலாளர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    • விழா 23-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
    • 21-ந்தேதி அய்யா வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.

    சென்னை செங்குன்றம் அருகே இடைப்பாளையத்தில் ஸ்ரீமன் அய்யா வைகுண்டர் அலங்காரபதி அமைந்து உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 23-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. விழாவில் தினமும் இரவு ஏடுவாசிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    வருகிற 21-ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு அய்யா வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. 22-ந்தேதி சனிக்கிழமை இரவு விளக்கு பூஜை மற்றும் அய்யா வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 23-ந்தேதி ஞாயிற்றுக்கி ழமை மாலை 5 மணிக்கு செங்குன்றம் காந்தி நகர் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இருந்து அய்யா கருட வாகனத்தில் அலங்காரபதிக்கு ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் அய்யாவுக்கு சுருள் மற்றும் பலகார பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வருகிறார்கள். இரவு 7 மணிக்கு பக்தர்கள் அய்யாவுக்கு நேமிசம் செலுத்தும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள் மற்றும் தீராத நோய் தீர வத்தல் பால் அருந்தும் நிகழ்ச்சி நடைபெறு கிறது.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி கலந்து கொள்கிறார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி எஸ். ரமேஷ் அய்யா, தர்மகர்த்தா ஏ. ஹரிஷ் சிவாஜி அய்யா ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • அன்னதானம் வழங்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூரில் பழமை வாய்ந்த ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்ட திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடக்கிறது. விழாவின் 8-ம் நாளன்று பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், சிறப்பு பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து இரவில் அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்காக கோவிலில் இருந்து புறப்பட்டார். பின்னர் அங்குள்ள பால் கிணற்றின் அருகே மேளதாளங்கள் முழங்க அய்யா நாராயணசுவாமி பரிவேட்டையாடினார்.

    இதன் அடையாளமாக கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் அம்பு எய்தினார். அதன் பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

    • அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரம் நடத்தப்பட்டது.
    • தேரோட்டம் திங்கட்கிழமை நடைபெறுகிறது.

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் நாராயண சுவாமி கோவில் 94-வது ஆண்டு ஆனி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாளான நேற்று பரிவேட்டை விழா நடந்தது.

    இதையொட்டி மாலையில் அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், சிறப்பு பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பரிவாரங்கள் புடைசூழ ஊருக்கு மேற்கே உள்ள காலங்கரை ஆற்றில் இறங்கி மேளதாளங்கள் முழங்க பரிவேட்டையாடினார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    • 7-ந்தேதி பரிவேட்டை நடக்கிறது.
    • 10-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், சிறப்பு பணி விடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து மூலஸ்தானத்தில் இருந்து பக்தர்கள் கொடி பட்டத்தை எடுத்து வந்து, கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க, சங்கு நாதம் இசைக்க கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    விழாவில் களக்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். விழாவின் 8-ம் நாளான வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பால் கிணற்றின் அருகே பரிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ம் நாளான வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • கோவில்விளை சந்திப்பில் வைத்து அன்னதர்மம் நடந்தது.
    • அன்பு கொடிமக்கள் வழிநெடுகிலும் சுருள் வைத்து வழிபட்டனர்.

    நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் ஆனி தேர் திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழா நாட்களில் தினமும் பணிவிடை, உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, அய்யா பல்வேறு வாகனங்களில் பவனி வருதல், சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள், கோலப்போட்டிகள், அய்யாவின் ஆன்மிக கச்சேரி, அய்யா குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடி தவக்கோலத்தில் வடக்கு வாசலில் மக்களுக்கு அருள் பாலித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 11-ம் திருவிழாவான நேற்று நடைபெற்றது. அதன்படி காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, மதியம் 1 மணிக்கு பணிவிடை, பிற்பகல் 3 மணிக்கு யானை முன்னே செல்ல மயிலாட்டம், கோலாட்டம், சிங்காரி மேளம், நாதஸ்வரத்துடன் ஆஞ்சநேயர் தேர் முன்னே செல்ல செம்பவள பஞ்சவர்ண தேர் வீதிஉலா வந்தது. அய்யாவின் அன்பு கொடிமக்கள் காவி உடை அணிந்து, முத்துக்கொடை ஏந்தி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    அப்போது, வழிநெடுகிலும் மோர் தர்மம், பழ தர்மம், இனிப்பு தர்மங்கள், கோவில்விளை சந்திப்பில் வைத்து அன்னதர்மம் நடந்தது. மேலும், அன்பு கொடிமக்கள் வழிநெடுகிலும் சுருள் வைத்து வழிபட்டனர். தேரானது கோவிலில் இருந்து புறப்பட்டு மேலஉடையப்பன்குடியிருப்பு வழியாக கோவில்விளை சந்திப்பு வந்து பின்னர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு அன்னதர்மம், வாணவேடிக்கை, நள்ளிரவு 12 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 1 மணிக்கு அய்யாவின் வாகனப்பவனி, 2 மணிக்கு கொடியிறக்கம், இனிப்பு வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு சுசீந்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×