search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன் குடியிருப்பு‌ ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் திருஏடு வாசிப்பு
    X

    திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.

    சங்கரன் குடியிருப்பு‌ ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் திருஏடு வாசிப்பு

    • ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் திருஏடு வாசிப்பு கார்த்திகை மாதம் 25-ந் தேதி வரை நடைபெற்றது.
    • கார்த்திகை 23-ந் தேதி அய்யா வைகுண்டருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

    சாத்தான்குளம்:

    சங்கரன் குடியிருப்பு ‌ ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் திருஏடு வாசிப்பு கார்த்திகை மாதம் 9-ந் தேதி முதல் கார்த்திகை மாதம் 25-ந் தேதி வரை நடைபெற்றது. தினமும் மாலை 7 மணிக்கு பனிவிடையும் அதனைத் தொடர்ந்து திருஏடு வாசிப்பும் சிறப்பு தர்மங்களும் தினம்தோறும் நடைபெற்றது.

    கார்த்திகை 23-ந் தேதி மக்கள் அனைவரும் சுருள் ஏந்தி மாபெரும் திருக்கல்யாண ஊர்வலம்மும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், பனிவிடையும், திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யா வைகுண்டருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.ஏற்பாடுகளை தாங்கல் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×