search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சக்தி விநாயகர், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X
    சக்தி விநாயகர், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    கோழிப்புலியூர் கிராமத்தில் சக்தி விநாயகர், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது புனிதநீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து முத்துமாரியம்மன் கோவில் மீது உள்ள கோபுர கலசத்தின் மீதுபுனித நீரை ஊற்றினார்,
    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள கோழிப்புலியூர் கிராமத்தில் சக்தி விநாயகர், மற்றும் மாரியம்மன்கோவில், மகா கும்பாபிஷேகம் நடந்தது, சக்தி விநாயகர் கோவில் புதியதாக புதுப்பிக்கப்பட்டு, பஞ்ச வர்ணம்பூசி கும்பாபிஷேக விழா நடந்தது, சக்தி விநாயகர் கோவில் முன்பு யாகசாலை அமைத்து, 3 யாக குண்டம் அமைத்து, 108 கலசம் வைத்து, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, நாடி சந்தானம், கோமாதா பூஜைதம்பதி பூஜைஆகிய மூன்று கால பூஜைகள் செய்து, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர், கலசத்தை வைத்து, பல்வேறு மூலிகை மூலம் யாகம் நடந்தது, பின்னர் புனிதநீர் கலசத்தை சிவாச்சாரியார்கள் மேளதாளத்துடன் சக்தி விநாயகர் கோவிலை சுற்றி வந்து, கோவில் மீதுள்ள, கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்கள், பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர்.

    இதேபோல் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது புனிதநீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து முத்துமாரியம்மன் கோவில் மீது உள்ள கோபுர கலசத்தின் மீதுபுனித நீரை ஊற்றினார், பின்னர் அங்கு குவிந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர், பின்னர் மூலவர் விநாயகருக்கும் முத்துமாரி அம்மனுக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்து கற்பூர ஆராதனை செய்தனர். இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×