search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பாபிஷேக விழா
    X
    கும்பாபிஷேக விழா

    தூத்துக்குடி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

    தூத்துக்குடி கற்பக விநாயகர் கோவிலில் நேற்று காலையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
    தூத்துக்குடி அருகே ஸ்பிக்நகர் எதிர்புறம் அத்திமரப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் நேற்று காலையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அர்ச்சகர்கள் கிரேனிலிருந்து கோபுரத்திற்கு மகா அபிஷேகம், தீபாராதனை, அபிஷேகம் மற்றும் ஆராதனைகளை செய்தனர்.

    இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×