search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தாராபிஷேகம்
    X
    ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தாராபிஷேகம்

    ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தாராபிஷேகம்

    திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.
    கோடை காலம் என்றாலே வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே வேலூரை வெயிலூர் என்று அழைக்கிறார்கள். இந்தாண்டும் கோடை வெயிலின் கொடுமையை மக்கள் சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். பிப்ரவரி மாத இறுதியிலேயே 100 டிகிரியை எட்டியது. இதனால் வேலூர் மாநகரில் மதியவேளையில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. இரவிலும் அனல் காற்று வீசுவதால் தூங்க முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரிவெயில் நேற்று தொடங்கியது. இதையொட்டி வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தாராபிஷேகம் செய்யப்பட்டது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்றும் எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
    Next Story
    ×