என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தாராபிஷேகம்
Byமாலை மலர்6 May 2021 4:54 AM GMT (Updated: 6 May 2021 4:54 AM GMT)
திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.
கோடை காலம் என்றாலே வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே வேலூரை வெயிலூர் என்று அழைக்கிறார்கள். இந்தாண்டும் கோடை வெயிலின் கொடுமையை மக்கள் சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். பிப்ரவரி மாத இறுதியிலேயே 100 டிகிரியை எட்டியது. இதனால் வேலூர் மாநகரில் மதியவேளையில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. இரவிலும் அனல் காற்று வீசுவதால் தூங்க முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரிவெயில் நேற்று தொடங்கியது. இதையொட்டி வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தாராபிஷேகம் செய்யப்பட்டது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்றும் எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரிவெயில் நேற்று தொடங்கியது. இதையொட்டி வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தாராபிஷேகம் செய்யப்பட்டது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்றும் எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X