search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
    X
    அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

    ஈரோடு மகா மாரியம்மன் கோவில் விழாவில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

    ஈரோடு பெரியார் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    ஈரோடு பெரியார் வீதியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி இரவு 8 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.

    நேற்று காலை 7 மணிக்கு பக்தர்கள் காரைவாய்க்கால் சென்று தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். சில பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதையொட்டி மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
    Next Story
    ×