search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேசவிளக்கி மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    தேசவிளக்கி மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.

    காரைக்கால் பகுதியில் 4 கோவில்களில் கும்பாபிஷேகம்

    காரைக்கால் புதுத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசவிளக்கி மாரியம்மன், செங்கழுநீர் விநாயகர், அய்யனார், குட்டியாண்டவர் ஆகிய 4 கோவில்களின் கும்பாபிஷேக விழா நடந்தது.
    காரைக்கால் புதுத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசவிளக்கி மாரியம்மன், செங்கழுநீர் விநாயகர், அய்யனார், குட்டியாண்டவர் ஆகிய 4 கோவில்களின் கும்பாபிஷேக விழா கடந்த 15-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    பின்னர் 20-ந்தேதி மாலை முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 4 கால யாக பூஜையை தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் காலை 5.30 மணியில் இருந்து 9.35 மணிக்குள் ஒவ்வொரு கோவில்களின் கலசங்களிலும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×