
விழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. இதை தொடர்ந்து காலை 9 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் மங்கள இசை, சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தன. இரவு 9 மணிக்கு சுவாமியும், அம்பாளும் புஷ்பக விமானத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 2-வது நாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நகைச்சுவை திரையிசை பட்டிமன்றம், இரவு 9 மணிக்கு சுவாமியும், அம்பாளும் புஷ்பக விமானத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் காலை 6 மணிக்கும், இரவு 10 மணிக்கும் சுவாமி பூதவாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி வருதல், இரவு 7 மணிக்கு பரத நாட்டியம், 9.30 மணிக்கு மக்கள்மார் அழைப்பு, இரவு 10 மணிக்கு கன்னிவிநாயகர் சுப்பிரமணியசாமி மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
20-ந் தேதி காலை 6 மணிக்கும், இரவு 9 மணிக்கும் சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் பவனி வருதல் நடைபெற உள்ளது. தினமும் காலையிலும், இரவிலும் வாகன பவனி நடக்கிறது.
விழாவின் 9-வது நாளான 25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுப்பிரமணியசாமி தடம் பார்க்க எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதன் பிறகு 7.45 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு பரத நாட்டியம், 10 மணிக்கு சுவாமியும், அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சப்தாவர்ண நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 26-ந் தேதி மாலை 6 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ஆறாட்டுத்துறைக்கு ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், இரவு 9 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ஆறாட்டுத்துறையில் இருந்து மேளதாளங்களுடன் பவனி வருதல் உள்ளிட்டவை நடக்கின்றன.