என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்18 Feb 2021 5:01 AM GMT (Updated: 18 Feb 2021 5:01 AM GMT)
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ்நகர் நகரில் உள்ள வென்னிமலை முருகன் கோவிலில் இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ்நகர் நகரில் உள்ள வென்னிமலை முருகன் கோவில் மாசித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது.
முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் கொடிமரத்திற்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பால்குடம் கோவில் வந்தடைந்தவுடன் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பெண்கள் 1008 திருவிளக்கு பூஜை நடத்தினர். தொடர்ந்து சுவாமி வீதி உலா மற்றும் கோவில் வளாகத்தில் இசை கச்சேரியும் நடைபெற்றது.
முதல்நாள் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை காமராஜ் நகர் பொதுமக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சமுதாயத்தினர் திருவிழாக்கள் நடத்துகின்றனர்.
முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் கொடிமரத்திற்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பால்குடம் கோவில் வந்தடைந்தவுடன் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பெண்கள் 1008 திருவிளக்கு பூஜை நடத்தினர். தொடர்ந்து சுவாமி வீதி உலா மற்றும் கோவில் வளாகத்தில் இசை கச்சேரியும் நடைபெற்றது.
முதல்நாள் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை காமராஜ் நகர் பொதுமக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சமுதாயத்தினர் திருவிழாக்கள் நடத்துகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X