என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பொங்கலூர் நீலகண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்6 Feb 2021 3:34 AM GMT (Updated: 6 Feb 2021 3:34 AM GMT)
பொங்கலூரில் நீலகண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் ஆனதையொட்டி ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
பொங்கலூரில் நீலகண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் ஆனதையொட்டி கோவில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் விழா கடந்த 1-ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை, 2-ம்கால மற்றும் 3-ம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் 4-ம்கால யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 7.45 மணிக்கு புனிதநீர் கலசங்கள் மேளதாளத்துடன் சிவாச்சாரியார்களால் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
அதனைத்தொடர்ந்து 8:15 மணிக்குமேல் பரிவார தெய்வங்கள், சிவாலய தெய்வங்கள் மற்றும் நீலகண்டியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. விழாவிற்கு கூனம்பட்டி கல்யாணபுரிஆதீனம் சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமை தாங்கினார்.
பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார், செஞ்சேரிமலை முத்துசிவராம சுவாமி அடிகளார், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் மோகன் கார்த்திக் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் 4-ம்கால யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 7.45 மணிக்கு புனிதநீர் கலசங்கள் மேளதாளத்துடன் சிவாச்சாரியார்களால் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
அதனைத்தொடர்ந்து 8:15 மணிக்குமேல் பரிவார தெய்வங்கள், சிவாலய தெய்வங்கள் மற்றும் நீலகண்டியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. விழாவிற்கு கூனம்பட்டி கல்யாணபுரிஆதீனம் சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமை தாங்கினார்.
பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார், செஞ்சேரிமலை முத்துசிவராம சுவாமி அடிகளார், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் மோகன் கார்த்திக் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X