search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நல்லம்பள்ளி அருகே ராமச்சந்திர சாமி கோவில் கும்பாபிஷேக விழா
    X
    நல்லம்பள்ளி அருகே ராமச்சந்திர சாமி கோவில் கும்பாபிஷேக விழா

    நல்லம்பள்ளி அருகே ராமச்சந்திர சாமி கோவில் கும்பாபிஷேக விழா

    நல்லம்பள்ளியை அடுத்த பாகலஅள்ளி கிராமத்தில் உள்ள விநாயகர், ஸ்ரீசீதா லட்சுமண பரத சத்ருக்கண ஹனுமன் சமேத ஸ்ரீராமச்சந்திர சாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    நல்லம்பள்ளியை அடுத்த பாகலஅள்ளி கிராமத்தில் உள்ள விநாயகர், ஸ்ரீசீதா லட்சுமண பரத சத்ருக்கண ஹனுமன் சமேத ஸ்ரீராமச்சந்திர சாமி கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    பின்னர் கும்பாபிஷேக விழா நடந்தது. சென்னை நங்கல்லூர் ஸ்ரீலஸ்ரீ காமாட்சி சாமிகள் மற்றும் சிவசரவண குருக்கள் தலைமையிலான அர்ச்சகர்கள் கும்பாபிஷேகத்ைத நடத்தி வைத்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×