search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மணக்காட்டூர் ஐயப்பன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
    X
    மணக்காட்டூர் ஐயப்பன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

    மணக்காட்டூர் ஐயப்பன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

    செந்துறை அருகே மணக்காட்டூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    செந்துறை அருகே மணக்காட்டூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழாவையொட்டி கணபதி ஹோமம், கலச பூஜை மற்றும் படி பூஜை நடந்தது. அதையடுத்து அய்யப்பனுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கிராம தேவதைகளுக்கு கனி மாற்றுதல் மற்றும் தோரணம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் ஐயப்பன் ரத வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கினர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×