search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் பெற வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
    X
    திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் பெற வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

    திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் பெற வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சாமி தரிசனம் செய்வதற்கான தரிசன டிக்கெட் பெற உள்ளூர் பக்தர்கள் ஆதார் அட்டையுடன் வந்து கவுண்ட்டர்களில் காத்திருந்தனர்.
    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக உள்ளூர் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ள ராமச்சந்திரா புஷ்கரணி, மகதி கலையரங்கம், மாநகராட்சி அலுவலக வளாகம், ராமாநாயுடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, எம்.ஆர். பள்ளி புதிய மார்க்கெட் ஆகிய 5 இடங்களில் 50 கவுண்ட்டர்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேற்று காலை வழங்கப்பட்டன.

    தரிசன டிக்கெட் பெற உள்ளூர் பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே ஆதார் அட்டையுடன் வந்து கவுண்ட்டர்களில் காத்திருந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந்தேதி வரை நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் தரிசன டிக்கெட்டுகள் வீதம் ஒரு லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது, என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×