என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசன கட்டணம் குறைக்கப்படுமா?
Byமாலை மலர்21 Dec 2020 5:48 AM GMT (Updated: 21 Dec 2020 5:48 AM GMT)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி தரிசன கட்டணத்தை பழைய நடைமுறை படி குறைத்து வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மார்கழி மாதம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களை கோவில் பணியாளர்கள் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். மேலும் முககவசம் அணியாமல் வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
வழக்கமாக கோவிலில் தரிசன கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்பட்டு வந்தது. சில முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது மட்டுமே ரூ.50 வசூலிக்கப்படும். ஆனால் சிறப்பு தரிசனம் கட்டணமாக தொடர்ந்து ரூ.50 வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதனால் கோவில் நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி தரிசன கட்டணத்தை பழைய நடைமுறை படி குறைத்து வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பக்தர்கள் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களை கோவில் பணியாளர்கள் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். மேலும் முககவசம் அணியாமல் வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
வழக்கமாக கோவிலில் தரிசன கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்பட்டு வந்தது. சில முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது மட்டுமே ரூ.50 வசூலிக்கப்படும். ஆனால் சிறப்பு தரிசனம் கட்டணமாக தொடர்ந்து ரூ.50 வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதனால் கோவில் நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி தரிசன கட்டணத்தை பழைய நடைமுறை படி குறைத்து வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X