search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உற்சவர் கள்ளழகர் பெருமாள்
    X
    உற்சவர் கள்ளழகர் பெருமாள்

    கள்ளழகர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்: 25-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது. 25-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி நேற்று பகல் பத்து உற்சவம் தொடங்கியது. உற்சவர் கள்ளழகர் பெருமாள் மேளதாளம் முழங்க பரிவாரங்களுடன் புறப்பாடாகி அங்குள்ள கருடாழ்வார் சன்னதி முன்புள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அங்கு வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

    இந்த திருவிழா வருகிற24-ந் தேதி வரை நடைபெறும். 25-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி அன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு திருவிழா நடைபெறும்.

    அதன் பிறகு ராப்பத்து உற்சவம் தொடங்கி நடைபெறுகிறது. ஜனவரி 3-ந் தேதி இந்த விழா நிறைவு பெறும்.
    Next Story
    ×