என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வரவூர் மாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
Byமாலை மலர்1 Dec 2020 4:51 AM GMT (Updated: 1 Dec 2020 4:51 AM GMT)
கடலூர் புதுவண்டிப்பாளையத்தில் வரவூர் மாரியம்மன் கோவிலில் யாக பூர்ணாகுதி பூஜையுடன் 108 சங்காபிஷேகமும் நடந்தது.
கடலூர் புதுவண்டிப்பாளையத்தில் வரவூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை மாத 3-வது சோமவாரத்தையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கோவிலில் கோ பூஜை நடந்தது. பின்னர் கணபதி பூஜையும், அதனை தொடர்ந்து கலச ஸ்தாபனத்துடன், சங்கல்ப பூஜையும், மூலமந்திர யாக வேள்வியும் நடந்தது.
இதையடுத்து காலை 10 மணிக்கு யாக பூர்ணாகுதி பூஜையுடன் 108 சங்காபிஷேகமும் நடந்தது. பின்னர் சாமி வெள்ளிகவச அலங்காரத்தில் எழுந்தருளியதும், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X