என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பேரூர் அருகே ஐயப்பன் கோவிலில் 108 சங்கு அபிஷேக விழா
Byமாலை மலர்27 Nov 2020 7:04 AM GMT (Updated: 27 Nov 2020 7:04 AM GMT)
பேரூர் அருகே தீத்திபாளையம், பாலாஜி நகரில் ஐயப்பசுவாமி கோவிலில், 108 சங்கு அபிஷேக விழா மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
பேரூர் அருகே தீத்திபாளையம், பாலாஜி நகரில் ஐயப்பசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், 108 சங்கு அபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, தர்மசாஸ்தா ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டு, அர்ச்சகர் மு.ராஜேந்திரசிவம் தலைமையில் யாகவேள்வி வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், கன்னிமூல கணபதி, ஸ்ரீபாலமுருகன், ஐயப்பசுவாமி ஆகிய தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேகம், 108 சங்கு தீர்த்த அபிஷேக விழா நடந்தன.
இதையடுத்து, ஐயப்பனுக்கு அலங்கார சிறப்பு வழிபாடு, திருமுறை விண்ணப்பம் ஆகியவை நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை, திருப்பணிக்குழு தலைவர் பெருமாள், செயலாளர் விஸ்வநாதன், துணைச்செயலாளர் கண்ணன், துணைத்தலைவர் கணேசன், பொருளாளர் தேவராஜ், துணைப்பொருளாளர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X