என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அரியாங்குப்பம் சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
Byமாலை மலர்16 Nov 2020 8:19 AM GMT (Updated: 16 Nov 2020 8:19 AM GMT)
அரியாங்குப்பம் சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. வருகின்ற 19-ந் தேதி வேல்வாங்கும் நிகழ்ச்சியும், 20-ந் தேதி சூரசம்ஹாரமும், 21-ந் தேதி வள்ளி தெய்வானை, சமேத சுப்பிரமணிய சாமி திருக்கல்யாணமும் நடக்கிறது.
அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி கோவிலில் கணபதி வழிபாட்டுடன் நேற்று காலை கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் குருமகா சன்னிதானம் சீர் வளர் சீர் சிவஞான பாலய சாமிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜைக்கு பின் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்புகளை கட்டி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் வருகின்ற 19-ந் தேதி வேல்வாங்கும் நிகழ்ச்சியும், 20-ந் தேதி சூரசம்ஹாரமும், 21-ந் தேதி வள்ளி தெய்வானை, சமேத சுப்பிரமணிய சாமி திருக்கல்யாணமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங் காவல் குழுவினர், கந்த சஷ்டி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
இதேபோல் அரியாங்குப்பம் காக்காயந்தோட்டம், வீராம்பட்டினம், முருங்கப்பாக்கம், தேங்காய்திட்டு உள்ளிட்ட பகுதியில் உள்ள முருகர் கோவில்களில் கந்த சஷ்டி விழா சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜைக்கு பின் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்புகளை கட்டி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் வருகின்ற 19-ந் தேதி வேல்வாங்கும் நிகழ்ச்சியும், 20-ந் தேதி சூரசம்ஹாரமும், 21-ந் தேதி வள்ளி தெய்வானை, சமேத சுப்பிரமணிய சாமி திருக்கல்யாணமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங் காவல் குழுவினர், கந்த சஷ்டி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
இதேபோல் அரியாங்குப்பம் காக்காயந்தோட்டம், வீராம்பட்டினம், முருங்கப்பாக்கம், தேங்காய்திட்டு உள்ளிட்ட பகுதியில் உள்ள முருகர் கோவில்களில் கந்த சஷ்டி விழா சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X