search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழாபஞ்ச மூர்த்திகள் புறப்பாடு
    X
    தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழாபஞ்ச மூர்த்திகள் புறப்பாடு

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழாபஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது

    தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு திருவிழாபஞ்ச மூர்த்திகள் புறப்பாடு கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
    தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த நவம்பர் 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடை காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்று வருகிறது.

    தினமும் சிறப்பு பூஜைகள், மண்டகப்படி தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன. சுவாமி- அம்பாள் சப்பர உலா கோவில் வளாகத்திலேயே நடைபெறுகிறது. திருவிழாவின் 9-ம் நாளில் தேரோட்டம் வழக்கமாக நடைபெறும்.

    இந்த ஆண்டு 9-ம் நாளான நேற்று தேரோட்டத்திற்கு பதிலாக கோவில் வளாகத்தில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் புறப்பாடு கோவில் வளாகத்தில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் செய்திருந்தார்.
    Next Story
    ×