என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பெரும்பாறை அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்5 Nov 2020 4:21 AM GMT (Updated: 5 Nov 2020 4:21 AM GMT)
பெரும்பாறை அருகே புதூர் கிராமத்தில் காளியம்மன், கன்னிமூலை விநாயகர், கருப்பணசாமி, பாண்டீஸ்வரர் ஆகிய கோவில்களின் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
பெரும்பாறை அருகே புதூர் கிராமத்தில் காளியம்மன், கன்னிமூலை விநாயகர், கருப்பணசாமி, பாண்டீஸ்வரர் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலத்துடன் புனித நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை கோவில்களின் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமன், திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், மணலூர் ஊராட்சி தலைவர் லதா செல்வகுமார், துணைத்தலைவர் சுருளிராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் மலைக்கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
விழாவில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமன், திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், மணலூர் ஊராட்சி தலைவர் லதா செல்வகுமார், துணைத்தலைவர் சுருளிராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் மலைக்கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X