search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
    X
    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிறப்பு வழிபாடு

    ஐப்பசி மாத கார்த்திகையையொட்டி சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிறப்பு வழிபாடு

    சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் ஐப்பசி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் முக கவசத்துடன் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
    நாகை மாவட்டம் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் ஐப்பசி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை தொடர்ந்து சிங்காரவேலவருக்கு, பால், பன்னீர், திரவியம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யபட்டது. பின்னர் சிங்காரவேலவர், வள்ளி, தெய்வானைக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுகக் கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதை தொடர்ந்து சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் முக கவசத்துடன் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

    கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கும், தோப்புத்துறை கைலாசநாதர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது.
    Next Story
    ×