என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நாளை மறுநாள் தொடக்கம்
Byமாலை மலர்15 Oct 2020 6:35 AM GMT (Updated: 15 Oct 2020 6:35 AM GMT)
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா நாளை மறுநாள்(சனிக்கிழமை) தொடங்கி, வருகிற 25-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நாளை மறுநாள்(சனிக்கிழமை) தொடங்கி, வருகிற 25-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
மகிஷாசுரனை அழிக்க அம்மன் கடும் தவம் புரிந்து மரக் கேடயத்தில் அம்மன் புறப்பாடும், 10-வது நாளான 26-ந்தேதி விஜயதசமி அன்று சமயபுரம் கடைவீதி வன்னி மரத்திற்கு வெள்ளி குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து அம்பு போடுதல் நிகழ்ச்சியும் நவராத்திரி திருவிழாவில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், சமயபுரம் தடை செய்யப்பட்ட பகுதியாக இருப்பதாலும், இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா அம்மன் புறப்பாடு நடைபெறாது.
நாளை மறுதினம் முதல் 25-ந்தேதி வரை கோவிலில் மாலை 5 மணிக்கு உற்சவ அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மன் கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதைத்தொடர்ந்து விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு இரவு 7மணிக்கு ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். இந்த தகவலை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
மகிஷாசுரனை அழிக்க அம்மன் கடும் தவம் புரிந்து மரக் கேடயத்தில் அம்மன் புறப்பாடும், 10-வது நாளான 26-ந்தேதி விஜயதசமி அன்று சமயபுரம் கடைவீதி வன்னி மரத்திற்கு வெள்ளி குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து அம்பு போடுதல் நிகழ்ச்சியும் நவராத்திரி திருவிழாவில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், சமயபுரம் தடை செய்யப்பட்ட பகுதியாக இருப்பதாலும், இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா அம்மன் புறப்பாடு நடைபெறாது.
நாளை மறுதினம் முதல் 25-ந்தேதி வரை கோவிலில் மாலை 5 மணிக்கு உற்சவ அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மன் கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதைத்தொடர்ந்து விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு இரவு 7மணிக்கு ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். இந்த தகவலை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X