என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கன்னிவாடி அருகே கோவில் திருவிழா: பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நூதன வழிபாடு
Byமாலை மலர்12 Oct 2020 4:28 AM GMT (Updated: 12 Oct 2020 4:28 AM GMT)
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே டி.பண்ணைபட்டியில் பிரசித்திபெற்ற மகாலட்சுமி அம்மன் கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நூதன வழிபாடு நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே டி.பண்ணைபட்டியில் பிரசித்திபெற்ற மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை அன்று திருவிழா நடைபெறும்.
அப்போது பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக அவர்களது தலையில் தேங்காய் உடைத்து நூதன வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை அமராவதி ஆற்றங்கரையில் இருந்து புனிதநீர் குடங்களில் எடுத்து வரப்பட்டது. பின்னர் தீர்த்தக்குடம், முளைப்பாரி உள்ளிட்டவை கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.
இதைத்தொடர்ந்து நள்ளிரவு 2 மணிக்கு மகாலட்சுமி தாயார் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இந்தநிலையில் நேற்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு சக்தி கரகம் எடுத்து வரப்பட்டு, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நூதன வழிபாடு நடந்தது. இந்த திருவிழாவில் டி.பண்ணைப்பட்டியை சுற்றியுள்ள 20 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக அவர்களது தலையில் தேங்காய் உடைத்து நூதன வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை அமராவதி ஆற்றங்கரையில் இருந்து புனிதநீர் குடங்களில் எடுத்து வரப்பட்டது. பின்னர் தீர்த்தக்குடம், முளைப்பாரி உள்ளிட்டவை கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.
இதைத்தொடர்ந்து நள்ளிரவு 2 மணிக்கு மகாலட்சுமி தாயார் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இந்தநிலையில் நேற்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு சக்தி கரகம் எடுத்து வரப்பட்டு, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நூதன வழிபாடு நடந்தது. இந்த திருவிழாவில் டி.பண்ணைப்பட்டியை சுற்றியுள்ள 20 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X