search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கருட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு கள்ளழகர் கோவிலில் வர்ணக்குடை சாத்தும் விழா
    X
    கருட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு கள்ளழகர் கோவிலில் வர்ணக்குடை சாத்தும் விழா

    கருட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு கள்ளழகர் கோவிலில் வர்ணக்குடை சாத்தும் விழா

    மதுரை அருகே உள்ள கள்ளழகர் கோவிலில் கருட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு வர்ணக்குடை சாத்தும் விழா நடந்தது.
    மதுரை கீழமாரட் வீதி நவநீதகிருஷ்ணன் பஜனை கூடத்தின் சார்பில் கள்ளழகருக்கு வர்ணக்குடை எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இந்த குடையானது 4 மாசி வீதிகளின் வழியாக தல்லாகுளம் பெருமாள் கோவில் சென்று அங்கிருந்து புறப்பட்டு அழகர்கோவில், கள்ளழகர் கோவிலுக்கு வந்தடைந்தது.

    பின்பு அங்குள்ள ஆண்டாள் சன்னதி முன்பாக இந்த வர்ணக்குடை வைக்கப்பட்டது. அங்குள்ள மண்டப வளாகத்தில் ஏற்கனவே கருட வாகனத்தில் எழுந்தருளியிருந்த கள்ளழகர் பெருமாளுக்கு இந்த வர்ணக்குடை பட்டர்களின் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க சாத்தப்பட்டது. இதைதொடர்ந்து சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. வருடம் தோறும் புரட்டாசி மாதம் இந்த விழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த வருடமும் நேற்று காலையில் நடந்தது. இதில் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் கூட்டமாக செல்லாமல் வரிசையாக முக கவசம் அணிந்து சென்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில் கோவில் நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×