என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்3 Oct 2020 7:37 AM GMT (Updated: 3 Oct 2020 7:37 AM GMT)
சென்னை மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் 10 நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
சென்னை மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் 10 நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத திருவிழா நேற்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதற்காக காலை 7 மணியளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருநாமக்கொடியை பக்தர்கள் சுமந்தபடி கோவில் வளாகத்தில் பதிவலம் வந்தனர்.
பின்னர் சங்குகள் ழுழங்க அய்யா அரகர சிவ சிவ என பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்ப 70 அடி உயர கொடி கம்பத்தில் திருநாமக்கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி காலையில் பால் பணிவிடை, மதியம் பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலையில் பணிவிடை உகப்படிப்பு, அதை தொடர்ந்து திருஏடு வாசிப்பு நடைபெற்றது. இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அய்யா பதிவலம் வந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்தார்.
கொரோனா நோய் தொற்று காரணமாக குறைந்த அளவு பக்தர்களே விழாவில் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு சானிடைசர் வழங்கி கைகளை சுத்தம் செய்தும், உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின்னரே கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர். கோவில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இருந்தது.
பின்னர் சங்குகள் ழுழங்க அய்யா அரகர சிவ சிவ என பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்ப 70 அடி உயர கொடி கம்பத்தில் திருநாமக்கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி காலையில் பால் பணிவிடை, மதியம் பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலையில் பணிவிடை உகப்படிப்பு, அதை தொடர்ந்து திருஏடு வாசிப்பு நடைபெற்றது. இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அய்யா பதிவலம் வந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்தார்.
கொரோனா நோய் தொற்று காரணமாக குறைந்த அளவு பக்தர்களே விழாவில் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு சானிடைசர் வழங்கி கைகளை சுத்தம் செய்தும், உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின்னரே கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர். கோவில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X