search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை
    X
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியையொட்டி மாலை நேரத்தில் கருட வாகன (கருடசேவை) ஊர்வலம் நடப்பது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவலால் கடந்தசில மாதங்களாக பவுர்ணமி கருடசேவை கோவில் உள்ளேயே நடக்கிறது. அதேபோல் இந்த மாதத்துக்கான பவுர்ணமி கருடசேவை நேற்று இரவு 7 மணியளவில் நடந்தது. கோவிலில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது வருகிற 20-ந்தேதி இரவு கருடசேவை நடக்கிறது. அன்று உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். அத்துடன் இந்த மாதம் இறுதியில் 31-ந்தேதி பவுர்ணமி கருடசேவை நடக்கிறது. அன்று உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
    Next Story
    ×