search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
    X
    வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

    வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

    வேதாரண்யத்தில் நாட்டு மடம் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    வேதாரண்யத்தில் நாட்டு மடம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
    Next Story
    ×