search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கள்ளழகர்
    X
    கள்ளழகர்

    கள்ளழகர் கோவிலில் உறியடி உற்சவ விழா

    அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலையில் கோவில் உள் பிரகாரத்தில் இருந்து பல்லக்கில் எழுந்தருளி சுவாமி புறப்பாடு நடந்தது.
    அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலையில் கோவில் உள் பிரகாரத்தில் இருந்து பல்லக்கில் எழுந்தருளி சுவாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் அருகில் உள்ள உறியடி மண்டபத்தில் உறியடி உற்சவம் நடந்தது.

    அப்போது மேள தாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் யானை கல்யாண சுந்தரவல்லி முன்னே செல்ல, அலங்கரிக்கப்பட்ட அந்த மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகர் பெருமாள் முன்னிலையில் உறியடி விழா நடந்தது. பின்னர் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன.

    தொடர்ந்து அதே பரிவாரங்களுடன் சுவாமி வந்த வழியாக சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேர்ந்தார். தடை உத்தரவு ஊரடங்கு காரணத்தால் பக்தர்கள் கூட்டமாக கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வில்லை. முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×