search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி பிரம்மோற்சவம்
    X
    திருப்பதி பிரம்மோற்சவம்

    திருப்பதி பிரம்மோற்சவ விழா நாட்களில் 4 மாட வீதிகளில் தங்கத்தேர், மரத்தேரோட்ட உலா ரத்து

    திருப்பதி பிரம்மோற்சவ விழா நாட்களில் தங்கத்தேரோட்டம், மரத்தேரோட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாகக் கோவில் உள்ளே சர்வ பூபால வாகனத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை வைத்து, கோவில் தங்கப் பிரகாரத்தை வலம் வருகின்றனர்.
    திருமலை :

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 27-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி 15-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 18-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் ஆகியவை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.

    அதேபோல் 24-ந்தேதி தங்கத்தேரோட்டம், 26-ந்தேதி மரத்தேரோட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாகக் கோவில் உள்ளே சர்வ பூபால வாகனத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை வைத்து, கோவில் தங்கப் பிரகாரத்தை வலம் வருகின்றனர். 27-ந்தேதி சக்கர ஸ்நானம் ஸ்ரீவாரி புஷ்கரணியில் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி வாகனச் சேவை, ஸ்நாபன திருமஞ்சனம் ஆகியவை கோவில் உள்ளே கல்யாண மண்டபத்தில் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×