search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
    X
    முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

    ஆவணி மாத கிருத்திகையை யொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

    பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் சாமிக்கு பால், தயிர் மற்றும் தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
    நாமக்கல்-மோகனூர் சாலை காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் நேற்று ஆவணி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 8 மணிக்கு கணபதி பூஜையுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.

    பின்னர் சாமிக்கு பால், தயிர் மற்றும் தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வெண்பட்டு உடுத்தி, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாமி அருள் பாலித்தார். இதேபோல் நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமிக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் சாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×