search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சென்னையில், ராமர், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை
    X
    சென்னையில், ராமர், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை

    சென்னையில் ராமர், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை

    அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நடந்த நேரத்தில் சென்னையில் உள்ள ராமர், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று கோலாகலமாக நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நடந்த நேரத்தில் சென்னையில் உள்ள ராமர், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சென்னை அசோக்நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. ராமரின் உருவப்படத்துக்கு மலர் தூவி பூஜிக்கப்பட்டது.

    இதில் பெண்கள் உள்பட பக்தர்கள் சமூக இடைவெளியுடன் விளக்கு ஏற்றி வழிபட்டனர். அனைவரும் ராம நாமம் பாடி மனதார வேண்டிக்கொண்டனர். இதேபோல தியாகராயநகர், பட்டாளம், மயிலாப்பூர், மந்தைவெளி உள்பட சென்னையில் பல இடங்களில் உள்ள ராமர், ஆஞ்சநேயர் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    மேலும் பட்டாளம் உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் இந்து அமைப்புகள் சார்பில் ராமர் சிலைக்கு மலர் தூவி வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாடு நடத்தியவர்கள் அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு லட்டு உள்ளிட்ட இனிப்புகளை பிரசாதமாக வழங்கினர்.
    Next Story
    ×