search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெற்றியில் மூன்றுபட்டை போடுவதற்கான காரணம் தெரியுமா?
    X
    நெற்றியில் மூன்றுபட்டை போடுவதற்கான காரணம் தெரியுமா?

    நெற்றியில் மூன்றுபட்டை போடுவதற்கான காரணம் தெரியுமா?

    கோவில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக அடித்துக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. அந்த காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    கோவில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக அடித்துக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும்.

    இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு சாமவேதம், நடுவிரல் யஜீர் வேதம், மோதிரவிரல் சாமவேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது. முப்பட்டையிடுவது வேதங்கள் மட்டுமின்றி மேலும் பற்பல அர்த்தங்களையும் குறிப்பதாக உள்ளது.

    அவற்றுள் சில,

    1. பிரம்மா, விஷ்ணு, சிவன்,
    2. சிவன், சக்தி, ஸ்கந்தர்
    3. அறம், பொருள், இன்பம்
    4. குரு, லிங்கம், சங்கமம்
    5. படைத்தல், காத்தல், அழித்தல்.
    Next Story
    ×