
வீட்டுப் பொங்கலுக்கு மறுநாள், மாட்டுப்பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டும். 16.1.2020 (வியாழக்கிழமை) அன்று மாட்டுப்பொங்கல் வருகிறது. அன்று காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் பொங்கல் வைத்து கோ பூஜை செய்து வழிபட உகந்த நேரமாகும். மாடுகளுக்கு கண்டிப்பாக பொங்கல் நைவேத்தியம் வழங்க வேண்டும். இதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகும்.
அன்றைய தினம் மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து மாடுகளின் கழுத்தில் பூமாலையும், கரும்பு மாலையும் கட்டி வழிபடுவது நல்லது. நைவேத்தியத்தில் கொஞ்சம், நம் குடும்ப உறுப்பினர்களும் சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் சலிக்காது உழைத்து வாழும் குணம் நம்மை வந்து சேரும். நமக்கு உற்ற தோழனாய் இருந்து உன்னத வாழ்விற்கு அடிகோலும் மாடுகளை வணங்கி மகிழ்வோம். மாடுகளை வீதியில் அழைத்துச் செல்லும்பொழுது மங்கல ஓசை முழங்கவேண்டும் அல்லது சங்கு ஊதி தீபாராதனை காட்டவேண்டும். நிறைவாக சூறைத்தேங்காய் உடைத்து திருஷ்டி கழிக்கவேண்டும்.
தொகுப்பு: சிவல்புரி சிங்காரம்