
தேங்காய் உடைக்கும் போது அது அழுகிய நிலையில் இருந்தால் ஆன்மிகம் சார்ந்து இருப்பவர்களுக்கு அது ஏமாற்றத்தை, கலக்கத்தை ஒரு மன குழப்பத்தை அளிக்கும். இதை ஒரு அபசகுனமாக பார்பார்கள். ஆனால், உடைக்கும் போது அழுகிய தேங்காய் வருவது நல்ல அறிகுறி என்றும். உங்களை அண்டி இருக்கும் தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி போன்றவை அகன்று போகிறது என்பதன் நல்ல அறிகுறி தான் இது என கூறப்படுகிறது. கோவிலில் சாமிக்கு படைக்கும் தேங்காய் மட்டும் அழுகக்கூடாது. காரணம் அழுகிய தேங்காயை சாமிக்கு படைக்க கூடாது என்பது மட்டுமே பொருள். மற்றபடி அது அபசகுணம் அல்ல.