என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா 30-ந்தேதி தொடங்குகிறது- 4-ந்தேதி கருடசேவை
Byமாலை மலர்24 Sep 2019 6:19 AM GMT (Updated: 24 Sep 2019 6:19 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. 4-ந்தேதி கருடசேவை நடைபெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 30-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. அதையொட்டி 29-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. 30-ந்தேதி மாலை 5.23 மணியில் இருந்து 6 மணிவரை மீன லக்னத்தில் கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.
அக்டோபர் மாதம் 1-ந்தேதி காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு அம்ச வாகன வீதிஉலா.
2-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா, 4-ந்தேதி மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து இரவு 12 மணிவரை கருட வாகன வீதிஉலா.
5-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலா, 6-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 7-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 8-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது.
வாகன வீதிஉலா தினமும் காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரையிலும், இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணிவரையிலும் நடக்கிறது. மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடனும் சிறப்பு அலங்காரத்திலும், பிரத்யேக அவதாரத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
அக்டோபர் மாதம் 1-ந்தேதி காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு அம்ச வாகன வீதிஉலா.
2-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா, 4-ந்தேதி மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து இரவு 12 மணிவரை கருட வாகன வீதிஉலா.
5-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலா, 6-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 7-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 8-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது.
வாகன வீதிஉலா தினமும் காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரையிலும், இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணிவரையிலும் நடக்கிறது. மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடனும் சிறப்பு அலங்காரத்திலும், பிரத்யேக அவதாரத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X