என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம்
Byமாலை மலர்13 Sep 2019 5:33 AM GMT (Updated: 13 Sep 2019 5:33 AM GMT)
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி தினமும் காலை 8 மணிக்கும், இரவு 7 மணிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரு அம்மனுடன், பெருமாளும் எழுந்தருளும் வாகன பவனி நடந்தது. இதுதவிர அபிஷேகங்களும், சிறப்பு வழிபாடுகளும், சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.
9-ம் திருவிழாவான நேற்று மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரு அம்மனையும், பெருமாளையும் அலங்கரிக்கப்பட்ட இந்திர தேராகிய சப்பரத்தேரில் எழுந்தருள செய்து நான்கு ரதவீதிகளின்வழியே மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் அன்புமணி தலைமையில், திருக்கோவில் பணியாளர்களும், பக்தர்களும் செய்து இருந்தனர்.
திருவிழாவையொட்டி தினமும் காலை 8 மணிக்கும், இரவு 7 மணிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரு அம்மனுடன், பெருமாளும் எழுந்தருளும் வாகன பவனி நடந்தது. இதுதவிர அபிஷேகங்களும், சிறப்பு வழிபாடுகளும், சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.
9-ம் திருவிழாவான நேற்று மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரு அம்மனையும், பெருமாளையும் அலங்கரிக்கப்பட்ட இந்திர தேராகிய சப்பரத்தேரில் எழுந்தருள செய்து நான்கு ரதவீதிகளின்வழியே மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் அன்புமணி தலைமையில், திருக்கோவில் பணியாளர்களும், பக்தர்களும் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X