என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கள்ளழகர் கோவிலில் திருபவுத்திர உற்சவம் தொடங்கியது
Byமாலை மலர்10 Sep 2019 3:24 AM GMT (Updated: 10 Sep 2019 3:24 AM GMT)
கள்ளழகர் கோவிலில் திருபவுத்திர உற்சவம் நேற்று தொடங்கியது. இதனையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆவணி மாதம் நடைபெறும் திருபவுத்திர திருவிழாவும் ஒன்று. அதன்படி நேற்று காலை கோவிலில் உள்ள சுந்தரபாண்டியன் கொறடு மண்டபத்தில் மேளதாளம் முழங்க பட்டர்களின் வேதமந்திரங்களுடன் திரு பவுத்திர உற்சவம் தொடங்கியது. அப்போது மண்டபத்தில் உற்சவர் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். அப்போது கீழே விரிக்கப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட தானியங்கள் மீது 108 கலசங்கள் தனித்தனியே வைக்கப்பட்டு அதன்மீது தேங்காய், வாழை பழம், மாவிலைகள், மலர்மாலைகள் மற்றும் தாம்பூலங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
அதன்பின்பு அழகர்மலை நூபுரகங்கை தீர்த்தத்துடன், 135 அபூர்வ மூலிகை திரவியங்கள் சேர்க்கப்பட்டு பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. இதில் பட்டு நூல்களால் ஆன வண்ண மாலைகள் வைத்து பூஜைகள் நடந்தது. தொடர்ந்து திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் சுவாமிக்கு நடந்தது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட திருபவுத்திர பட்டு நூல் மாலைகளை மூலவர் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகிய தெய்வங்களுக்கு அணிவிக்கப்பட்டு விஷேச பூஜைகள் நடந்தன.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும்.
வருகிற 13-ந்தேதி பவுர்ணமி நிறைநாளன்று விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
அதன்பின்பு அழகர்மலை நூபுரகங்கை தீர்த்தத்துடன், 135 அபூர்வ மூலிகை திரவியங்கள் சேர்க்கப்பட்டு பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. இதில் பட்டு நூல்களால் ஆன வண்ண மாலைகள் வைத்து பூஜைகள் நடந்தது. தொடர்ந்து திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் சுவாமிக்கு நடந்தது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட திருபவுத்திர பட்டு நூல் மாலைகளை மூலவர் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகிய தெய்வங்களுக்கு அணிவிக்கப்பட்டு விஷேச பூஜைகள் நடந்தன.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும்.
வருகிற 13-ந்தேதி பவுர்ணமி நிறைநாளன்று விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X