என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆவணி மூலத்திருவிழாவில் உலவாக் கோட்டை அருளிய லீலை அலங்காரம்
Byமாலை மலர்6 Sep 2019 3:58 AM GMT (Updated: 6 Sep 2019 3:58 AM GMT)
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் உலவாக் கோட்டை அருளிய லீலை அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் காட்சியளித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 12-ந்தேதி வரை திருவிழா நடக்கிறது. கடந்த 1-ந் தேதியில் இருந்து தினமும் திருவிளையாடல்களை விளக்கும் திருவிழா நடக்கிறது. திருவிழாவில் நேற்று உலவாக் கோட்டை அருளிய திருவிளையாடல் லீலை நடந்தது. அந்த ‘உலவாக் கோட்டை அருளிய லீலை‘ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.
உலவாக் கோட்டை அருளிய லீலை புராண வரலாறு வருமாறு:-
மதுரையில் வாழ்ந்த அடியார்க்கு நல்லார் என்ற அடியார் தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகே தான் உண்பது என்ற கொள்கையை உடையவராக இருந்தார்.
அன்னதானம் வழங்கிய அவரது செல்வம் ஒருகட்டத்தில் வற்றியது. ஆனால் அவர் கடன் பெற்றாவது தனது கடமையை ஆற்றி வந்தார்.
நாட்கள் செல்ல செல்ல கடனும் கிடைக்கவில்லை. எனவே அவர் தனது மனைவியுடன் சுவாமி சோமசுந்தரரை தரிசித்து பின் உயிர்நீப்பது என்று எண்ணி கோவிலுக்குள் சென்றார்.
அப்போது தருமநெறியின் உண்மை நிலை கண்ட இறைவன் அசரீரியாக தோன்றி வீட்டிற்கு செல், அங்கே உனக்காக அள்ள அள்ள குறையாத நெல்மணிகளை கொண்ட உலவாக் கோட்டை ஒன்றை அளித்துள்ளோம் என்று கூறினார். அதன்படி 2 பேரும் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு உலவாக் கோட்டை இருப்பதை கண்டனர்.
பின்னர் அதன் மூலம் கிடைத்த நெல்மணிகளை கொண்டு கடைசி காலம் வரை சிவனடியார்களுக்கு உணவளித்து வாழ்ந்தனர்.
பின்னர் நேற்று இரவு சுவாமி நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்மன் யாளி வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூலவீதி கீழபட்டமார் தெரு, வடக்கு கிழக்கு சித்திரை வீதி வழியாக மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நாளை(சனிக்கிழமை) காலை வளையல் விற்ற திருவிளையாடல் நிகழ்ச்சியும், அன்று இரவு சுவாமி சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது.
உலவாக் கோட்டை அருளிய லீலை புராண வரலாறு வருமாறு:-
மதுரையில் வாழ்ந்த அடியார்க்கு நல்லார் என்ற அடியார் தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகே தான் உண்பது என்ற கொள்கையை உடையவராக இருந்தார்.
அன்னதானம் வழங்கிய அவரது செல்வம் ஒருகட்டத்தில் வற்றியது. ஆனால் அவர் கடன் பெற்றாவது தனது கடமையை ஆற்றி வந்தார்.
நாட்கள் செல்ல செல்ல கடனும் கிடைக்கவில்லை. எனவே அவர் தனது மனைவியுடன் சுவாமி சோமசுந்தரரை தரிசித்து பின் உயிர்நீப்பது என்று எண்ணி கோவிலுக்குள் சென்றார்.
அப்போது தருமநெறியின் உண்மை நிலை கண்ட இறைவன் அசரீரியாக தோன்றி வீட்டிற்கு செல், அங்கே உனக்காக அள்ள அள்ள குறையாத நெல்மணிகளை கொண்ட உலவாக் கோட்டை ஒன்றை அளித்துள்ளோம் என்று கூறினார். அதன்படி 2 பேரும் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு உலவாக் கோட்டை இருப்பதை கண்டனர்.
பின்னர் அதன் மூலம் கிடைத்த நெல்மணிகளை கொண்டு கடைசி காலம் வரை சிவனடியார்களுக்கு உணவளித்து வாழ்ந்தனர்.
பின்னர் நேற்று இரவு சுவாமி நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்மன் யாளி வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூலவீதி கீழபட்டமார் தெரு, வடக்கு கிழக்கு சித்திரை வீதி வழியாக மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நாளை(சனிக்கிழமை) காலை வளையல் விற்ற திருவிளையாடல் நிகழ்ச்சியும், அன்று இரவு சுவாமி சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X