என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிறப்பான வாழ்வை அளிக்கும் வரிஷ்ட யோகம்
Byமாலை மலர்7 Jun 2019 6:36 AM GMT (Updated: 7 Jun 2019 6:36 AM GMT)
ஒருவரது சுய ஜாதகத்தில் சூரியன் அமர்ந்த ராசிக்கு 3, 6, 9, 12 ஆகிய ராசிகளில் சந்திரன் இருந்தால் அது வரிஷ்ட யோகம் ஆகும். அந்த வகையில் சிறப்பான வாழ்வை அளிக்கும் வரிஷ்ட யோகம் பற்றி இங்கே காணலாம்.
முற்பிறவியில் செய்த நன்மை, தீமைகளை பொறுத்து இப்பிறவி அமைகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் ஜோதிடம், ஒருவர் நல்ல வாழ்க்கையை பெறுவதற்கு அவரது முற்பிறவி நல்வினைகளே காரணம் என்றும் குறிப்பிடுகிறது. அந்த வகையில் சிறப்பான வாழ்வை அளிக்கும் வரிஷ்ட யோகம் பற்றி இங்கே காணலாம்.
ஒருவரது சுய ஜாதகத்தில் சூரியன் அமர்ந்த ராசிக்கு 3, 6, 9, 12 ஆகிய ராசிகளில் சந்திரன் இருந்தால் அது வரிஷ்ட யோகம் ஆகும். அந்த இடங்களில் வளர்பிறை சந்திரன் இருந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். தேய்பிறை சந்திரனாக இருந்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்க இயலாது. வரிஷ்ட யோகத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றலும், நற்குணங்களும் பெற்றவர்களாக இருப்பதுடன், எதிலும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பார்கள்.
நல்ல ஞாபகத்திறன் கொண்ட இவர்கள் அனைத்தையும் நுட்பமாக ஆராயும் தன்மை கொண்டவர்கள். கல்வி கற்றல், கலைகள் பழகுதல் ஆகியவற்றில் அதிக ஆர்வம் இருக்கும். மிகுந்த தைரியசாலிகள் என்பதால் மனதிற்கு சரியென்று பட்டதை துணிந்து செய்வார்கள். சிலர் சாகச விரும்பிகளாக இருப்பார்கள்.
சிலருக்கு சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பு ஏற்படுவதுடன், தக்க சூழல் அமைந்தால் மக்கள் செல்வாக்குடன், அரசியல் தலைவர்களாகவும் மாறிவிடுவார்கள். நிர்வாகத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு உயர்ந்த பதவிகள் தேடி வரும். முப்பது வயதுக்கு பிறகே இவர்களுக்கு செல்வம் சேரத்தொடங்கும். ஈடுபடும் காரியங்களில் எளிதாக வெற்றி பெறும் அமைப்பு வரிஷ்ட யோகம் பெற்றவர்களுக்கு உண்டு.
ஒருவரது சுய ஜாதகத்தில் சூரியன் அமர்ந்த ராசிக்கு 3, 6, 9, 12 ஆகிய ராசிகளில் சந்திரன் இருந்தால் அது வரிஷ்ட யோகம் ஆகும். அந்த இடங்களில் வளர்பிறை சந்திரன் இருந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். தேய்பிறை சந்திரனாக இருந்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்க இயலாது. வரிஷ்ட யோகத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றலும், நற்குணங்களும் பெற்றவர்களாக இருப்பதுடன், எதிலும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பார்கள்.
நல்ல ஞாபகத்திறன் கொண்ட இவர்கள் அனைத்தையும் நுட்பமாக ஆராயும் தன்மை கொண்டவர்கள். கல்வி கற்றல், கலைகள் பழகுதல் ஆகியவற்றில் அதிக ஆர்வம் இருக்கும். மிகுந்த தைரியசாலிகள் என்பதால் மனதிற்கு சரியென்று பட்டதை துணிந்து செய்வார்கள். சிலர் சாகச விரும்பிகளாக இருப்பார்கள்.
சிலருக்கு சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பு ஏற்படுவதுடன், தக்க சூழல் அமைந்தால் மக்கள் செல்வாக்குடன், அரசியல் தலைவர்களாகவும் மாறிவிடுவார்கள். நிர்வாகத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு உயர்ந்த பதவிகள் தேடி வரும். முப்பது வயதுக்கு பிறகே இவர்களுக்கு செல்வம் சேரத்தொடங்கும். ஈடுபடும் காரியங்களில் எளிதாக வெற்றி பெறும் அமைப்பு வரிஷ்ட யோகம் பெற்றவர்களுக்கு உண்டு.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X