search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் 31-ந்தேதி திருவிழா
    X

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் 31-ந்தேதி திருவிழா

    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு திருவிழா வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.
    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலும் ஒன்று. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலின் மாசித்திருவிழா வருடந்தோறும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு பூத்தமலர் பூ அலங்காரம், பூச்சொரிதல், கொடியேற்றம் உள்பட பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழா வருகிற 31-ந்தேதி(வியாழக்கிழமை) பூத்தமலர் அலங்காரத்துடன் தொடங்குகிறது. அடுத்தநாள் 1-ந் தேதி மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 3-ந் தேதி சாட்டுதல், 5-ந் தேதி கொடியேற்றம், 8-ந்தேதி நாகல்நகர் புறப்பாடு நடைபெறுகிறது.

    அதனைத்தொடர்ந்து 15-ந் தேதி காலை 6 மணியளவில் பூக்குழி இறங்குதல், அன்று இரவு 8 மணியளவில் அம்மன் திருத்தேர் உலாவும், 16-ந் தேதி இரவு தசாவதாரம், 17-ந் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுதல், 18-ந்தேதி அதிகாலையில் கொடியிறக்கம், அன்று இரவு ஊஞ்சல் உற்சவம், 19-ந் தேதி இரவு 7 மணியளவில் தெப்பஉற்சவம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன், பரம்பரை அறங்காவலர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×