என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் 31-ந்தேதி திருவிழா
Byமாலை மலர்25 Jan 2019 6:08 AM GMT (Updated: 25 Jan 2019 6:08 AM GMT)
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு திருவிழா வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலும் ஒன்று. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலின் மாசித்திருவிழா வருடந்தோறும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு பூத்தமலர் பூ அலங்காரம், பூச்சொரிதல், கொடியேற்றம் உள்பட பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழா வருகிற 31-ந்தேதி(வியாழக்கிழமை) பூத்தமலர் அலங்காரத்துடன் தொடங்குகிறது. அடுத்தநாள் 1-ந் தேதி மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 3-ந் தேதி சாட்டுதல், 5-ந் தேதி கொடியேற்றம், 8-ந்தேதி நாகல்நகர் புறப்பாடு நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து 15-ந் தேதி காலை 6 மணியளவில் பூக்குழி இறங்குதல், அன்று இரவு 8 மணியளவில் அம்மன் திருத்தேர் உலாவும், 16-ந் தேதி இரவு தசாவதாரம், 17-ந் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுதல், 18-ந்தேதி அதிகாலையில் கொடியிறக்கம், அன்று இரவு ஊஞ்சல் உற்சவம், 19-ந் தேதி இரவு 7 மணியளவில் தெப்பஉற்சவம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன், பரம்பரை அறங்காவலர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழா வருகிற 31-ந்தேதி(வியாழக்கிழமை) பூத்தமலர் அலங்காரத்துடன் தொடங்குகிறது. அடுத்தநாள் 1-ந் தேதி மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 3-ந் தேதி சாட்டுதல், 5-ந் தேதி கொடியேற்றம், 8-ந்தேதி நாகல்நகர் புறப்பாடு நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து 15-ந் தேதி காலை 6 மணியளவில் பூக்குழி இறங்குதல், அன்று இரவு 8 மணியளவில் அம்மன் திருத்தேர் உலாவும், 16-ந் தேதி இரவு தசாவதாரம், 17-ந் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுதல், 18-ந்தேதி அதிகாலையில் கொடியிறக்கம், அன்று இரவு ஊஞ்சல் உற்சவம், 19-ந் தேதி இரவு 7 மணியளவில் தெப்பஉற்சவம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன், பரம்பரை அறங்காவலர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X