search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வள்ளலார் கூறும் பாவங்கள்
    X

    வள்ளலார் கூறும் பாவங்கள்

    வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், பாவங்கள் என்று 42 வகையான விஷயங்களை பட்டியலிட்டிருக்கிறார். அதனைப் பார்க்கலாம்.
    வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், பாவங்கள் என்று 42 வகையான விஷயங்களை பட்டியலிட்டிருக்கிறார். அதனைப் பார்க்கலாம்.

    * நல்லவர் மனதை நடுங்க வைப்பது.

    * வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.

    * தானம் கொடுப்போரைத் தடுப்பது.

    * சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.

    * மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.

    * குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.

    * ஏழைகள் வயிறு எரியச்செய்வது.

    * தருமம் பாராது தண்டிப்பது.

    * ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.

    * உயிர்க் கொலை செய்பவருக்கு உபகாரம் செய்வது.

    * களவு செய்பவருக்கு உளவுகள் சொல்வது.

    * பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.

    * ஆசை காட்டி மோசம் செய்வது.

    * போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.

    * வேலை வாங்கிக்கொண்டு கூலி குறைப்பது.

    * பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.

    * இரப்பவருக்குப் பிச்சை இல்லை என்பது.

    * கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.

    * நம்பியவரை நட்டாற்றில் கை நழுவுவது.

    * பயந்து ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.

    * கற்பிழந்தவளோடு கலந்துறைவது.

    * காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.

    * கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.

    * கருவைக் கலைப்பது.

    * குருவை வணங்கக் கூசி நிற்பது.

    * குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.

    * கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.

    * பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.

    * கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.

    * மாமிசம் உண்டு உடல் வளர்ப்பது.

    * கல்லும் நெல்லும் கலந்து விற்பது.

    * அன்புடையவருக்குத் துன்பம் செய்வது.

    * குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.

    * வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.

    * பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.

    * பொது மண்டபத்தை இடிப்பது.

    * ஆலயக் கதவை அடைத்து வைப்பது.

    * சிவனடியாரிடம் சீற்றம் கொள்வது.

    * தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.

    * சுத்த ஞானிகள் மீது அவதூறு சொல்வது.

    * தந்தை-தாய் மொழியைக் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.

    * தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது. 
    Next Story
    ×