என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
எறும்பீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 18-ம் தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்16 May 2018 7:55 AM GMT (Updated: 16 May 2018 7:55 AM GMT)
திருவெறும்பூரில் நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை மறுநாள் (18-ம் தேதி) தொடங்குகிறது.
திருவெறும்பூரில் நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து 19-ந் தேதியன்று காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.
மாலையில் பஞ்சமூர்த்திகள் கேடயத்தில் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி வீதி உலா நடக்கிறது. 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. 25 மற்றும் 26-ந் தேதிகளில் காலையில் பல்லக்கிலும், மாலையில் நந்தி வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம், பல்லக்கிலும் சுவாமி வீதி உலா நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 27-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடக்கிறது. இரவில் நடராஜர் திருவீதி உலா வந்து தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந் தேதி வைகாசி விசாகத்தன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது.
இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. 29-ந் தேதி மாலை முத்துப்பல்லக்கில் சுவாமி வீதி உலா நடக்கிறது. 30-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 31-ந் தேதி மாலை 7 மணிக்கு மேல் விடையாற்றி, மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
மாலையில் பஞ்சமூர்த்திகள் கேடயத்தில் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி வீதி உலா நடக்கிறது. 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. 25 மற்றும் 26-ந் தேதிகளில் காலையில் பல்லக்கிலும், மாலையில் நந்தி வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம், பல்லக்கிலும் சுவாமி வீதி உலா நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 27-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடக்கிறது. இரவில் நடராஜர் திருவீதி உலா வந்து தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந் தேதி வைகாசி விசாகத்தன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது.
இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. 29-ந் தேதி மாலை முத்துப்பல்லக்கில் சுவாமி வீதி உலா நடக்கிறது. 30-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 31-ந் தேதி மாலை 7 மணிக்கு மேல் விடையாற்றி, மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X