என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
![சாபவிமோசனம் பெற்ற மண்டூக மகரிஷியையும் அவர் சாப விமோசனம் பெற்றதை படத்தில் காணலாம். சாபவிமோசனம் பெற்ற மண்டூக மகரிஷியையும் அவர் சாப விமோசனம் பெற்றதை படத்தில் காணலாம்.](https://img.maalaimalar.com/Articles/2017/May/201705121126216559_chithirai-thiruvizha-kallalagar_SECVPF.gif)
X
சாபவிமோசனம் பெற்ற மண்டூக மகரிஷியையும் அவர் சாப விமோசனம் பெற்றதை படத்தில் காணலாம்.
சித்திரைத்திருவிழா: மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளித்தார்
By
மாலை மலர்12 May 2017 5:56 AM GMT (Updated: 12 May 2017 5:56 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மதுரை சித்திரைத்திருவிழாவில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விடிய, விடிய நடந்த தசாவதாரத்தில் கள்ளழகர் பல்வேறு அவதாரங்களில் காட்சி அளித்தார்.
சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மதுரை சித்திரைத் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த 7-ந் தேதி நடந்தது.
இதையடுத்து, அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு வந்த அழகர், சித்திரை முழுநிலவு தினமான நேற்று முன்தினம் வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து ராமராயர் மண்டபம் சென்றார். அன்று இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். இரவில் அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
அங்கிருந்து நேற்று காலை 6 மணிக்கு கள்ளழகர் திருமஞ்சனம் ஆகி ஏகாந்த சேவையில் பக்தி உலா நடைபெற்றது. பின்பு கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் சென்றார். மதியம் 3 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார். தவளையாக இருந்த தபசு முனிவருக்கு சாபவிமோசனம் அளித்ததை சுட்டிக்காட்டும் வகையில், முனிவரின் உருவம் அருகில் வைக்கப்பட்டு இருந்தது.
![](http://img.maalaimalar.com/InlineImage/201705121126216559_sabam._L_styvpf.gif)
மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர், நேற்று மதியம் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் கொடுத்தார். பின்பு கருட வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்ட காட்சி.
அப்போது அவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளிக்கும் வகையில் அங்கிருந்து நாரை வானில் பறக்கவிடப்பட்டது. அதை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிற்பகல் 3.30 மணிக்கு அனுமார் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார்.இரவு 11 மணியளவில் மீண்டும் ராமராயர் மண்டபத்திற்கு வந்தார். அங்கே திருமஞ்சனமாகி விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது.
முத்தங்கி, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் உள்பட பல்வேறு அவதாரங்களில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் பயபக்தியுடன் அழகரின் தசாவதார காட்சிகளை கண்டு தரிசித்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் பக்தி உலா நடக்க உள்ளது. பின்னர் இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி நாளை(13-ந் தேதி) அதிகாலை பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். பின்னர் மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு அழகர்கோவிலை அடைகிறார்.
இதையடுத்து, அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு வந்த அழகர், சித்திரை முழுநிலவு தினமான நேற்று முன்தினம் வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து ராமராயர் மண்டபம் சென்றார். அன்று இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். இரவில் அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
அங்கிருந்து நேற்று காலை 6 மணிக்கு கள்ளழகர் திருமஞ்சனம் ஆகி ஏகாந்த சேவையில் பக்தி உலா நடைபெற்றது. பின்பு கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் சென்றார். மதியம் 3 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார். தவளையாக இருந்த தபசு முனிவருக்கு சாபவிமோசனம் அளித்ததை சுட்டிக்காட்டும் வகையில், முனிவரின் உருவம் அருகில் வைக்கப்பட்டு இருந்தது.
![](http://img.maalaimalar.com/InlineImage/201705121126216559_sabam._L_styvpf.gif)
மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர், நேற்று மதியம் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் கொடுத்தார். பின்பு கருட வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்ட காட்சி.
அப்போது அவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளிக்கும் வகையில் அங்கிருந்து நாரை வானில் பறக்கவிடப்பட்டது. அதை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிற்பகல் 3.30 மணிக்கு அனுமார் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார்.இரவு 11 மணியளவில் மீண்டும் ராமராயர் மண்டபத்திற்கு வந்தார். அங்கே திருமஞ்சனமாகி விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது.
முத்தங்கி, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் உள்பட பல்வேறு அவதாரங்களில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் பயபக்தியுடன் அழகரின் தசாவதார காட்சிகளை கண்டு தரிசித்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் பக்தி உலா நடக்க உள்ளது. பின்னர் இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி நாளை(13-ந் தேதி) அதிகாலை பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். பின்னர் மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு அழகர்கோவிலை அடைகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)